search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.வி.பி. பள்ளி"

    • 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரித்விக், கிருத்திக் பிரணவ் ஜோடி முதலிடம் பெற்றனர்.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் திருப்பூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. திருப்பூர் சகோதயா கூட்டமைப்பில் உள்ள 23-க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இருந்து 250-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பிரிவில் வர்ணிகாஸ்ரீ, மகிமிதா ஜோடி முதலிடம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரித்விக், கிருத்திக் பிரணவ் ஜோடி முதலிடம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பிரிவில் ஐஸ்வர்ய லட்சுமி, ஸ்வேதா ஜோடி முதலிடம் பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் ரித்விக் முதலிடம் பெற்றார். 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் கவுஷிக் குகன் 2-ம் இடம் பெற்றார்.

    முன்னதாக தொடக்க விழாவுக்கு ஏ.வி.பி.பள்ளி தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார். முதல்வர் பிரமோதினி வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் ஜி.பவன்குமார், திருப்பூர் யூரோலைன் ஏற்றுமதி நிறுவன மேலாண்மை இயக்குனர் மெய்நம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி, பொருளாளர் லதாகார்த்திகேயன், முதல்வர் பிரமோதினி, ஒருங்கிணைப்பாளர் வி.மோகனா, பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ, ஸ்ரீமுருகன் நிட்ஸ் ஏற்றுமதி நிறுவன தலைவரும் முன்னாள் திருப்பூர் மாமன்ற உறுப்பினருமான பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். உடற்கல்வி ஆசிரியர் ஞானசுந்தரி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதாகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
    • முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் உலக மாணவர் தின விழா கொண்டாடப்பட்டது.ஏ.வி.பி. சிபிஎஸ்சி., பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதாகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக நகைச்சுவை பட்டிமன்றப் பேச்சாளர் சாந்தாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கனவுமெய்ப்படும் என்னும் தலைப்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தியும், சிரிப்போடு கூடிய சிந்தனையை தூண்டியும் சிறப்புரை ஆற்றினார்.

    வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினருடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாளில் ஏ.வி.பி.கல்விக் குழுமங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 10000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டும் சுமார் 10,200 க்கும் அதிகமான மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் சார்பில் 100000-க்கும் அதிகமான மரங்களை வழங்கி பசுமைத்தாயகத்திற்கு அடிகோலிய ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதியின் சமூகப்பணியினை பாராட்டியும் ஏவுகணைநாயகனின் கனவினை நனவாக்குவதற்காகவும் ஏ.வி.பி.நாயகன் என்னும் விருது வழங்கப்பட்டது.

    முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். மாணவி அதுல்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர். 

    • மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக நடனம், நாடகம்,பட்டிமன்றம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர்செகண்டரி பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். பள்ளி ஆசிரியை ரஞ்சிதா வரவேற்று பேசினார்.

    மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக நடனம், நாடகம்,பட்டிமன்றம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து மாணவர்களை மகிழ்வித்தனர்.குழந்தைகளை கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் பள்ளியின்முதல்வர் பிரமோதினி சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர் மன்றத்தினை சேர்ந்த மாணவி கீர்த்தனா நன்றி கூறினார். இந்நிழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின்ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் கலை நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே., அப்துல்கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது
    • கல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே., அப்துல்கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன் , பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான், மேலாளர் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் அப்துல்கலாம் கல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.  

    • மாணவர்கள் விநாயகர் வேடமணிந்து பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.
    • விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்தும், குத்துவிளக்கு ஏற்றியும் விநாயகரை வழிபட்டனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் விநாயகர் வேடமணிந்து பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். மேலும் விநாயகர் சிலைக்கு மாைல அணிவித்தும், குத்துவிளக்கு ஏற்றியும் விநாயகரை வழிபட்டனர்.

    இதில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பெரம்பலூர் மாவட்டம் சார்பில் தேசபக்தன் விருது வழங்கப்பட்டது.
    • நமது தாய்நாட்டின் பற்றுணர்வை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கீதப்பாடலை தமிழில் பாடிய மாணவன்.

     திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவன் ரெ.ஜெயோஷ் கிேஷார்.

    இவர் நமது தாய்நாட்டின் பற்றுணர்வை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கீதப்பாடலை தமிழில் பாடியதால் அவற்றினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்ச்சங்க இலக்கிய ஆய்வு நடுவம் பெரம்பலூர் மாவட்டம் சார்பில் தேசபக்தன் விருது வழங்கப்பட்டது.

    இதையடுத்து மாணவன் ஜெயோஷ் கிஷோரை ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக்சீனியர் செகண்டரி பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பள்ளி முதல்வர் ஜி.பிரமோதினி, பள்ளி ஒருங்கிணைப்பாளர் வி.மோகனா மற்றும் ஆசிரிய,ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • சேலத்தில் நடைபெற்ற புதிய உலக கலாம் சாதனை போட்டியில் 150 ஆயுர்வேத மூலிகை செடிகளை அடையாளப்படுத்தி காட்டினார்.
    • மாறுவேடப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு தேசியஅளவில் சாதனை புரிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் 1-ம் வகுப்பு பயிலும் மாணவி சன்விகா சேலத்தில் நடைபெற்ற புதிய உலக கலாம் சாதனை போட்டியில் 150 ஆயுர்வேத மூலிகை செடிகளையும், அவற்றின் பெயர்களையும் 1 நிமிடம் 45 நொடிகளில் மிகத்தெளிவாக அடையாளப்படுத்தி காட்டினார்.

    மேலும் அன்று நடைபெற்ற மாறுவேடப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு தேசியஅளவில் சாதனை புரிந்தார். பல்வேறு சாதனைகள் புரிந்த சன்விகாவிற்கு"டேலண்ட் ஐகான்'' விருதினை கிரேட் சக்சஸ் அகாடமி வழங்கி கவுரவித்தது. மேலும் கராத்தே போட்டியில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

    மிகச்சிறிய வயதிலேயே பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவி சன்விகாவை பள்ளி தாளாளர்கார்த்திகேயன் ,முதல்வர் ,ஒருங்கிணைப்பாளர் , ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.

    • 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி துவக்க விழா நடைபெற்றது.
    • மாணவ மாணவிகள் தங்கள் கலாசார நடனத்தின் மூலமாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்றனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன்,பள்ளி முதல்வர் டயானா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் சக்திமிருதுளா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மாணவ மாணவிகள் தங்கள் கலாசார நடனத்தின் மூலமாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்றனர். பள்ளி தாளாளர் கார்த்திகேயன் கல்வியின் முக்கியத்துவத்தையும்,ஒழுக்கத்தையும் மாணவர்களுக்கு விளக்கியதுடன் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினார். 

    • மாணவர்கள் சைக்கிளில் பேரணியாகச்சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • ஆசிரியர்கள் வரவேற்று மாணவர்களின் செயல்களை பாராட்டி மகிழ்ந்தனர்.

    திருப்பூர்,

    திருப்பூர், காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவர்கள் வலிமையான பாரதத்தை உருவாக்குவோம் என்ற கருத்தினை வலியுறுத்தியும் , உடல் நலத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் பள்ளியில் செயல்படும் உடல்நல ஆரோக்கிய மன்றத்தினைச் சேர்ந்த சுமார் 50-க்கும் அதிகமான மாணவர்கள் சைக்கிளில் பேரணியாகச்சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி வழிகாட்டுதலின் படி தொடங்கிய இச்சைக்கிள் பேரணியைப் பள்ளியின் முதல்வர் பிரமோதினி, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

    பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நடந்த இப்பேரணி காந்திநகர், அங்கேரிபாளையம், ஜே.எஸ். கார்டன்,அனுப்பர்பாளையம் ஆகிய இடங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இறுதியாக பள்ளி வந்தடைந்த பேரணி குழுவினரை பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று மாணவர்களின் செயல்களை பாராட்டி மகிழ்ந்தனர்.

    • குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர்.
    • மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வடைய செய்து வகுப்புகளை ஆரம்பித்தனர்.

    திருப்பூர்,

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டது. குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர். ஆசிரியர்கள் வரவேற்று ஆடல் பாடல்களுடன் மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வடைய செய்து வகுப்புகளை ஆரம்பித்தனர். பள்ளிதாளாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் சக்தி மிருதுளா ஆகியோர் மாணவர்களை வரவேற்று உற்சாகப்படுத்தினர். 

    ×